
நடிகை நயன்தாரா கலெக்டராக நடித்து, கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அறம். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது மட்டுமின்றி, படத்திற்கும் பாராட்டுக்கள் குவிந்தது.
உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், ஆழ்துளை கிணற்றில் மாட்டிக்கொண்ட குழந்தையை மீட்க நயன்தாரா எடுக்கும் அதிரடி முடிவுகளும், உயிரின் முக்கியத்துவத்தையும் உணர்த்தியிருந்தார் இயக்குனர் கோபி நயினார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது 'அறம் ' படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் நயன்தாராவையே நடிக்க வைக்க ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும், நடிகை சமந்தாவின் பெயரும் அடிபட்டு வருகிறது. நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'தர்பார்' விஜயுடன் 'பிகில்', சிரஞ்சீவியுடன் 'சைரா நரசிம்ம ரெட்டி' மற்றும் ஒரு சில படங்களில் பிசியாக இருப்பதால், கோபி நயினார் சமந்தாவை நடிக்க வைக்கும், முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கோபி நாயனாரின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்தும் நடிகை சமந்தாவிடம் பக்கம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.