
உணவு ஒவ்வாமை, மற்றும் லோ பி.பி. காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று திடீரென அனுமதிக்கப்பட்டிருந்த கவிப்பேரரசு வைரமுத்து இன்று மதியம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கடந்த மூன்று வாரங்களாக பாடகி சின்மயி மற்றும் அவரது கூட்டாளிகள் சிலரால் பாலியல் குற்றம் சுமத்தப்பட்டிருந்த கவிஞர் வைரமுத்து, கடுமையான மன உளைச்சலில் பாதிக்கப்பட்டிருந்தார். இவ்வளவு காலம் நெருங்கிப்பழகிய சிலர் கூட தனக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லையே என்கிற ஆதங்கத்தில் எழுந்த மன உளைச்சல் அது.
இதைத் தொடர்ந்து ஓய்வு எடுத்துவிட்டு சில தினங்கள் கழித்து சென்னை திரும்பலாம் என்று மதுரைக்குப் போன வைரமுத்து திடீர் உடல்நலக்குறைவால் நேற்று அட்மிட் ஆனார். அவரது உடல்நல வீழ்ச்சிக்கு உணவு ஒவ்வாமையும், லோ பி.பி.யும் காரணமாக ச் சொல்லப்பட்டாலும், அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்ததே முக்கிய காரணம் என்று அவருக்கு எடுத்து உணர்த்திய அப்பல்லோ டாக்டர்கள் அவர் சினிமாவுக்கு பாட்டு எழுதுவது உட்பட்ட திரைத்துறை வேலைகளுக்கு சில காலம் ஓய்வு கொடுத்துவிட்டு அமைதியான மனநிலையில் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. ஸோ கவிஞருக்கு நெக்ஸ்ட் தேவை ரெஸ்ட்...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.