நயன்தாராவை தொடர்ந்து அட்லீ - ஷாருக்கான் படத்தில் இணைந்த மற்றொரு தமிழ் நடிகை..! வேற லெவல் அப்டேட்..!

By manimegalai aFirst Published Sep 3, 2021, 8:06 PM IST
Highlights

இயக்குனர் அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்தில், தற்போது நயன்தாராவைத் தொடர்ந்து மற்றொரு தமிழ் நடிகை இணைந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
 

இயக்குனர் அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்தில், தற்போது நயன்தாராவைத் தொடர்ந்து மற்றொரு தமிழ் நடிகை இணைந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லீ, தமிழில் நடிகை நயன்தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா ஆகியோர் நடித்த 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படத்திலேயே விஜய்யை வைத்து 'தெறி' படத்தை இயக்கினார். இந்த படம் வெற்றியடையவே, தொடர்ந்து விஜய்யை வைத்து மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

'பிகில்' படத்தின் வெற்றிக்கு பின்னர், பாலிவுட் திரையுலகில் கால் பதித்துள்ளார் அட்லீ. 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போதே, அட்லீ ஷாருக்கானுக்கு கதை ஒன்றைக் கூறி அவரிடம் ஓகே வாங்கி விட்டதாகவும், ஷாருக்கான் அவர் கையில் வைத்திருக்கும் படங்களை நடித்து முடித்த பின்னர், அட்லி படத்தில் இந்த வருடத்தின் இறுதிக்குள் இணைவார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது வரை இந்த படம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. 

ரெட் சில்லி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் கடந்த சில நாட்களாகவே நடந்து வந்த நிலையில், இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு புனேவில் துவங்கியுள்ளது. இதில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஜி.கே.விஷ்ணு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்வதாகவும், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

தற்போது இந்த படத்தில், நயன்தாராவைத் தொடர்ந்து, ஏற்கனவே பாலிவுட் நடிகை ஒருவர் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், மற்றொரு தமிழ்நடிகை இணைத்துள்ளது  குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அது வேறு யாரும் இல்லை, 'பருத்திவீரன்' முத்தழகு தான்.  இவர் ஏற்கனவே நடிகர் ஷாருக்கான் நடித்த 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் ஒரு பாடலுக்கு அவருடன் குத்தாட்டம் போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!