தென்னிந்தியாவில் முதல் முறை.... ஆப்பிள் வாய்ப்பு பெரும் அனிருத்...!!!

 
Published : Feb 07, 2017, 02:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
தென்னிந்தியாவில் முதல் முறை.... ஆப்பிள் வாய்ப்பு பெரும் அனிருத்...!!!

சுருக்கம்

தனுஷ் நடித்த 3 படம் மூலம், இசையமைப்பாளராக அறிமுகம் கொடுத்தவர் அனிருத் முதல் படத்திலேயே இவர் இசையமைத்த ஒய் திஸ் கொலை வெறி பாடம் உலக அளவில் அவருக்கு ரசிகர்களை கொடுத்தது.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய், அஜித் போன்ற முன்னனி நடிகர்கள் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்று ட்ரெண்டில் உள்ளார் அனிருத்.

இந்நிலையில்  உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற இசை நிறுவனமான  'ஆப்பிள் மியூசிக்'. நிறுவனம் தற்போது இந்தியாவின் விளம்பர அம்பாசிடராக இளம் இசைப்புயல் அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ஆப்பிள் மியூசிக் இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நான் தேர்வு செய்யப்பட்டதை பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் கருதுகிறேன் என்று பதிவு செய்துள்ளார். 

ஆப்பிள் மியூசிக் பிராண்ட் அம்பாசிடராக தேர்வு செய்யப்பட்டுள்ள அனிருத்துக்கு கோலிவுட் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள், தொடர்ந்து  தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். 

ஆப்பிள் இசை நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக தென் இந்தியாவை சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனனியின் பிசினஸுக்கு முட்டுக்கட்டை... ஓப்பனிங்கே எண்டு கார்டு போட்ட ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
ரோகிணிக்கு அதிர்ச்சி கொடுத்த போலீஸ்... கடனில் தத்தளிக்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்