
நடிகை அமலா பாலின் முன்னாள் கணவர் இயக்குனர் ஏ.எல் விஜய்க்கும், ஐஸ்வர்யா என்கிற மருத்துவருக்கும் ஜூலை 11ம் தேதி குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது.
இந்த செய்தி அனைவருடைய கவனத்தை பெற்ற நிலையில், இதனை கண்டும் காணாதது போல் இருந்து வருகிறார் நடிகை அமலா பால்.
மேலும் தற்போது அமலா பால், என்ன மன நிலையில் உள்ளார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அமலாபால் இந்த திருமணத்தை சிறிதும் கண்டு கொள்ளாமல் அடுத்ததாக தான் நம்பியிருக்கும் திரைப்படமான 'ஆடை' படத்தின் பிரமோஷன் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளார்.
ஒவ்வொரு நாளும் 'ஆடை' படத்தைப் பற்றிய ஏதேனும் ஒரு தகவலை அவர் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் ஆடை படத்தின் டீசர் 10 மில்லியனை கடந்ததற்கும், ட்ரெய்லர் 4 மில்லியனை கடந்ததற்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்து சத்தம் இல்லாமல் தன்னுடைய படத்தை ப்ரோமோஷன் செய்து வருகிறார். மேலும் விஜயின் திருமணம் அமலாவை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பது இதில் இருந்து தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.