அமலாபாலின் 'ஆடை' ரிலீஸ் திடீர் ரத்து! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Published : Jul 19, 2019, 12:42 PM IST
அமலாபாலின் 'ஆடை' ரிலீஸ் திடீர் ரத்து!  அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சுருக்கம்

தமிழ் திரையுலக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, திரைப்படங்களாக விக்ரமின் 'கடாரம் கொண்டான்' மற்றும் அமலாபால் மிகவும் துணிச்சலான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள 'ஆடை' ஆகிய படங்கள் இன்று வெளியாகிறது.  

தமிழ் திரையுலக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, திரைப்படங்களாக விக்ரமின் 'கடாரம் கொண்டான்' மற்றும் அமலாபால் மிகவும் துணிச்சலான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள 'ஆடை' ஆகிய படங்கள் இன்று வெளியாகிறது.

இவ்விரு படங்களுக்கான ப்ரோமோஷன் பணிகள், கடந்த சில வாரங்களாகவே நடந்து வந்து நாம் அறிந்தது தான். 

இந்நிலையில், திட்டமிட்ட படி நடிகர் விக்ரம், கமல்ஹாசன் தயாரிப்பில் நடித்துள்ள 'கடாரம் கொண்டான்' ரிலீஸ் ஆகியுள்ளது. ரசிகர்களும் இந்த படம் குறித்த கருத்தை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள். 

ஆனால், அமலாபாலின் 'ஆடை' திரைப்படம் இன்று வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில், திடீர் என காலை காட்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. 'ஆடை' படத்தின் தயாரிப்பாளருக்கு, ஏற்பட்ட பைனான்ஸ்  பிரச்சனை காரணமாக காலை காட்சி ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது.

இதனால், இன்றைய முதல் காட்சிக்கு ஆன்லைன், மற்றும் வெகு தூரத்தில் இருந்து வைத்து ஆடை படத்தை பார்க்க டிக்கெட் வாங்கிய ரசிகர்கள், ஏமாற்றத்துடன் திரும்பினார். எனினும் மதியத்திற்குள் பிரச்சனை தீர்க்கப்பட்டு படம் ரிலீஸ் ஆகும் என கூறியுள்ளனர் படக்குழுவினர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!