
இனிமேல் சாராயக் குடிக்கும் காட்சியுள்ள அனைத்துப் படங்களுக்கும் “ஏ” சான்றிதழ் வழங்கப்படும் என்று மத்திய திரைப்பட தணிக்கை குழுவின் தலைவர் பஹ்லாஜ் நிஹலானி கூறியுள்ளார்.
மத்திய திரைப்பட தணிக்கை குழுவின் தலைவர் பஹ்லாஜ் நிஹலானி கூறியது:
“திரைப்படங்களில் சாராயம் குடிக்கும் காட்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் சமூகத்தில் குடிக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. டாஸ்மாக் விற்பனை உயர்ந்துக் கொண்டே போகிறது.
இந்த நிலையில், இனிமேல் சாராயம் குடிக்கும் காட்சி உள்ள அனைத்து படங்களுக்கும் ஏ சான்றிதழ் வழங்கப்படும். சும்மா பேருக்கு “மது அருந்துவது, புகைபிடிப்பது தவறு” என்று ஒரு மூலையில் போட்டால் மட்டும் போதாது” என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.