'டாய்லெட்' பற்றி பேசிய அக்ஷய்குமார்... விழுந்து விழுந்து சிரித்த மோடி...

 
Published : May 09, 2017, 08:45 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
 'டாய்லெட்' பற்றி  பேசிய அக்ஷய்குமார்... விழுந்து விழுந்து சிரித்த மோடி...

சுருக்கம்

akshaikumar meet modi

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் முக்கிய வில்லனாக நடித்து வருபவர் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.

சமீபத்தில் இவருக்கு  தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது , இந்நிலையில் இன்று பாரத பிரதமர் நரேந்திரமோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
 
பிரதமருடனான சந்திப்பு குறித்து நடிகர் அக்சயகுமார் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இந்த சந்திப்பின்போது பிரதமரிடம் என்னுடைய அடுத்தபடமான 'டாய்லெட்: ஏக் பிரேம் கதா' படம் குறித்து 15 நிமிடம்   கூறியதாகவும்.

இந்த படத்தின் டைட்டிலை கேட்டுவிட்டு பிரதமர் புன்னகை செய்ததாகவும் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த சந்திப்பு தனக்கு மகிழ்ச்சி அளித்ததாக பிரதமர் மோடியும் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
 
அக்சயகுமார் நடித்து வரும் 'டாய்லெட்: ஏக் பிரேம் கதா' என்ற திரைப்படம் பிரதமர் மோடியின் கனவுத்திட்டங்களில் ஒன்றான 'தூய்மை இந்தியா' திட்டம் குறித்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிங்கிள் பசங்க டைட்டில் வின்னர் யார்? பைனல்ஸில் கூமாபட்டி தங்கப்பாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
தாராவை பகடைக்காயாக பயன்படுத்தி எஸ்கேப் ஆக பார்க்கும் கதிர்... தட்டிதூக்கினாரா கொற்றவை? எதிர்நீச்சல் தொடர்கிறது