புதிய அவதாரம் எடுத்த அஜித்தின் மச்சினிச்சி - அரை நிர்வாண ஓவியங்களைக் கண்டு ரசிகர்கள் ஆச்சரியம்!

Published : Oct 29, 2019, 10:11 AM ISTUpdated : Oct 29, 2019, 10:16 AM IST
புதிய அவதாரம் எடுத்த அஜித்தின் மச்சினிச்சி - அரை நிர்வாண ஓவியங்களைக் கண்டு ரசிகர்கள் ஆச்சரியம்!

சுருக்கம்

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் தங்கை ஷாம்லி, நடிகை என்பது நம் அனைவருக்கும் தெரியும். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து பிரபலமான அவர், 2009ல் வெளியான ஓயே என்ற தெலுங்கு படம் மூலம் ஹிரோயினாக ப்ரமோஷன் ஆனார்.   

தமிழில் விக்ரம்பிரபுக்கு ஜோடியாக வீரசிவாஜி படத்தில் நாயகியாக அறிமுகமான ஷாம்லியை, அதன்பின் தமிழ் திரையுலகம் கண்டுகொள்ளவே இல்லை. இதனை பொருட்படுத்தாத அவர், அஜித்தைப் போன்று பல துறைகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். 

அந்த வகையில், தற்போது ஓவியராக ஷாம்லி புதிய அவதாரம் எடுத்துள்ளார். இதற்காக, பிரபல ஓவியர் ஏ.வி.இளங்கோவிடம் முறையாக ஓவியம் வரைய கற்றுக்கொண்ட அவர், சமீபகாலமாக ஓவியங்கள் வரைவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.


 
இந்நிலையில், அவர் வரைந்த ஒரு சில ஓவியங்கள் பெங்களூரு ஓவியக்கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அதில், ஷாமிலி வரைந்திருந்த பெண்களின் அரைநிர்வாண ஓவியங்கள் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. 

கலை நுணுக்கத்துடன் அவர் வரைந்த ஓவியங்களை பலரும் பாராட்டியதாகக் கூறப்படுகிறது. நடிகை ஷாமிலி நடிப்பை கைவிட்டு முழுமுழுக்க ஓவியத் துறையில் இறங்கியிருப்பது அவரது ரசிகர்களுக்கு கவலை அளித்துள்ளது. எனினும், ஓவியத் துறையில் ஷாம்லி உச்சம் தொடுவார் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?