
தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் சென்னை பகுதிகளில் சைதை, கொரட்டூர், வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள வீடுகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பலர் பாதிக்கப்பட்டு தங்கும் இடம் மற்றும் உணவிற்கு கஷ்டப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் அஜித் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில் அவர் ஆதரவற்ற குழந்தைகளுக்காகவும், முதியோர்களுக்காகவும் நடத்தி வரும் மோகினிமணி டிரஸ்ட், அனாதை ஆசிரமம், முதியோர் இல்லம்,தொண்டு நிறுவனம், திருமண மண்டபம், அவரது இல்லம் போன்றவற்றை பாதிக்கப்பட்ட மக்கள் உபயோகித்துக்கொள்ளலாம் என அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர்களுக்கான உணவு, உடை, பராமரிப்பு போன்றவற்றையும் தானே செய்து தருவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.