
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், திரையரங்க உரிமையாளருமான சிவசக்தி பாண்டியனை நுங்கம்பாக்கம் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் காரணமாகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் இருந்து ரூபாய் 85 லட்சம் வாங்கி கொண்டு, அதை தராமல் ஏமாற்றியதாக வழக்கு தொடரப்பட்டது. மேலும் அந்த நிறுவனத்திற்கு 25 லட்சம் ரூபாய், செக் கொடுத்து மோசடியிலும் ஈடுபட்டுள்ளார் சிவசக்தி பாண்டியன்.
இதுதொடர்பான வழக்கு, சென்னை சைதாப்பேட்டையில் நடந்து வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி அவர் மீது கைது நடவடிக்கை எடுக்க சொல்லி நுங்கம்பாக்கம் காவல்துறைக்கு வாரண்ட் பிறப்பித்தார். இதை தொடர்ந்து தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனை சில மணி நேரங்களுக்கு முன் கைது செய்துள்ளனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிவசக்தி பாண்டியனை, புழல் சிறையில் அடைத்துள்ளனர். தமிழில் பல படங்களை சிவசக்தி பாண்டியன் தயாரித்திருந்தாலும், அஜித்தின் காதல் கோட்டை படத்தை தயாரித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.