
பொங்கலை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி ரஜினிநாந்த் நடித்த பேட்ட திரைப்படமும், அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் வெளியானது. இரண்டு படங்களுமே செம வெற்றி பெற்றது.
ஆனால் இரு தரப்பு ரசிகர்களும் இது தொடர்பாக சமூக வலை தளங்களில் மோதி வருகின்றனர். பேட்ட படம் தான் அதிக வசூல் என்றும், இல்லை விஸ்வாசம் படம் தான் அதிக வசூல் என்றும் தகவல்களை வெளியிட்டு மோதி வருகின்றனர்.
இந்நிலையில் அஜித் நடித்த விஸ்வாசம் படம் செம்ம வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் சிவா இதுவரை தான் சந்தித்த அனைத்து விமர்சனங்களுக்கும் இந்த படத்தின்வாயிலாக சரியான பதிலடி கொடுத்து விட்டார் என்பதே அனைவரின் கருத்து.
.
மேலும் இந்த படம் குடும்பத்துடன் ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைத்து விட்டது. சிறியவர், பெரியவர் என்று வயது வித்தியாசமின்றி எல்லா தரப்பினரையும் படம் நன்றாக கவர்ந்துவிட்டது .
இந்தப்படம் ரூ 125 கோடி வசூலை ஏற்படுத்தி ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் கொண்டாடி கொண்டு வருகின்றனர் .
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் படத்தின் வெற்றியை சிறப்பிக்கும் விதமாக பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி சமூக விழிப்புணர்வை உருவாக்கியுள்ளனர்.
வேலூரில் உள்ள பல பகுதிகளில் அஜித் ரசிகர்கள் வீடு விடாக சென்று மரக் கன்றுகளை வழங்கி விஸ்வாசம் படத்தின் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.