விவசாயிகளுக்காக ஒன்று கூடிய விஜய் - அஜித் ரசிகர்கள்...!

 
Published : Apr 10, 2018, 06:19 PM ISTUpdated : Sep 19, 2018, 02:14 AM IST
விவசாயிகளுக்காக ஒன்று கூடிய விஜய் - அஜித் ரசிகர்கள்...!

சுருக்கம்

ajith and vijay fans combained for agriculture people

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று துவங்கிய போராட்டம் தற்போது அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்றுள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து காவேரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி வருகின்றனர். 

இப்படி போராடியும் எந்த வித பலனும் இல்லை என்பது தான் பலரது கருத்தாக உள்ளது. காரணம்... ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பல்வேறு இடங்களின் போராடினாலும் அனைவரும் இணைந்து போராடினர். ஆனால் தற்போது தனித்தனியாக பிரிந்து போராடி வருவதால் இந்த போராட்டம் வலுவிழந்து விட்டதாக கூறிவருகின்றனர். 

இவர்கள் பண்ணும் தவறை செய்ய விரும்பாத அஜித், விஜய், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களின் ரசிகர்கள் இந்த போராட்டத்திற்காக இணைந்துள்ளனர். எப்போதும் தனிப்பட்ட கருத்திற்காக மோதிக்கொள்ளும் இவர்கள் காவிரி பிரச்சனைக்காகவும் விவசாயிகளுக்காகவும் ஒன்று சேர்ந்துள்ளனர். 

மேலும் தமிழக மக்களுக்காக இப்படி ஒரு போராட்டத்தில் இறங்கியுள்ளது தங்களுக்கு பெருமையாக உள்ளது என கூறி இன்று சிதம்பரதில் உள்ள, அஜித், விஜய், தனுஷ், ஆகியோரின் ரசிகர்கள் ஒன்றிணைந்து ஒரே இடத்தில கூறி குரல் கொடுத்து வருகின்றனர். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!