
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்கி அரசியளுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் அந்த நாளை எதிர்கொண்டு உற்சாகமாக கர்த்துக்கொண்டுருக்கின்றனர்.
அதே போல கடந்த சில தினங்களாக பிரபல அரசியல்வாதிகளும், அவரை சந்தித்து, அரசியல் குறித்து பேசி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சற்றுமுன்னர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு ரஜினியை அவருடைய வீட்டில் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது தேசிய நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ரஜினி ரூ.1 கோடி தருவதாக கூறியது குறித்து அவரிடம் அய்யாக்கண்ணு பேசியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ரஜினியின் சகோதரர் 'ரஜினி ஏற்கனவே நதிநீர் இணைப்புக்கு அறிவித்தபடி ரூ.1 கோடியை வங்கியில் ஏற்கனவே, 'டிபாசிட்' செய்து விட்டதாகவும், நதிநீர் இணைப்பு பணிகள் துவங்கும்போது, சம்பந்தப்பட்டோரிடம் அந்த பணத்தை தருவார் என்றும், சொன்னால் சொன்னபடி செய்வார் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.