
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிசம்பர் 31ம் தேதி, அதாவது நாளை தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்தார். அரசியலுக்கு வந்து விட்டால் மக்கள் பணியில் தான் கவனம் செலுத்த முடியும். எனவே அதற்குள் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கை முடிப்பதற்காக ஐதராபாத் சென்றார்.
கடந்த 14ம் தேதி அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில், படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தொற்று இல்லை என்றாலும், அவர் ஐதராபாத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.
அப்படியிருக்க ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் 3 நாள் சிகிச்சைக்கு பின் கடந்த ஞாயிற்றுக்கிழமைவீடு திரும்பினார். அதற்கு முன்னதாக கொரோனா தொற்று ஏற்படுவதற்கான சூழ்நிலையை உருவாக்கி கொள்ள வேண்டாம் என்றும், மன உளைச்சல் ஏற்படும் படியான வேலைகளில் ஈடுபடக்கூடாது, ஒருவாரம் கட்டாய ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரஜினிகாந்த் தன்னுடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். கண்டிப்பாக ரஜினிகாந்த், கட்சி துவங்குவார் என எதிர்பார்த்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை கொடுத்தது.
அதே நேரத்தில் சில ரசிகர்கள் ரஜினியின் உடல் நிலை கருதி அவரது முடிவை வரவேற்றுள்ளனர். மேலும் திரையுலகினர், அரசியல் தலைவர்கள் பலரும் ரஜினிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உடல் நலம் முடியாமல் காரை விட்டு தட்டு தடுமாறி கீழே இறங்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.