விக்ரம் மகன் துருவ்வின் முதல் படம் ‘ஆதித்யா வர்மா’ மீண்டும் கைவிடப்பட்டது?...

By Muthurama LingamFirst Published Apr 9, 2019, 10:03 AM IST
Highlights

விக்ரம் மகன் நாயகனாக அறிமுகமாகும் ‘ஆதித்யா வர்மா’ படம் குறித்த செய்திகள் எதுவும் வெளியாகாத நிலையில் அப்படமும் டிராப் ஆகிவிட்டதாக வெளியாகும் செய்திகளில்  சிறிதும் உண்மையில்லை கொந்தளிப்படைந்துள்ளார் தயாரிப்பாளர் முகேஷ்.ஆர்.மேத்தா.

விக்ரம் மகன் நாயகனாக அறிமுகமாகும் ‘ஆதித்யா வர்மா’ படம் குறித்த செய்திகள் எதுவும் வெளியாகாத நிலையில் அப்படமும் டிராப் ஆகிவிட்டதாக வெளியாகும் செய்திகளில்  சிறிதும் உண்மையில்லை கொந்தளிப்படைந்துள்ளார் தயாரிப்பாளர் முகேஷ்.ஆர்.மேத்தா.

முதலில் பாலாவை வைத்து ‘வர்மா’படத்தைத் தயாரித்த இ4 எண்டர்டெய்ண்ட்மெண்ட்  நிறுவனம் பாலாவை படத்திலிருந்து தூக்கியபோது வீராப்பாக எங்களது புதிய வர்மா ஜூனில் மிக நேர்த்தியான படமாக ரிலீஸ் ஆகும் என்று அறிவித்திருந்தது. தொடர்ந்து இயக்குநர், ஒளிப்பதிவாளர் பெயர்களை மட்டும் அறிவித்த நிறுவனம் படப்பிடிப்பு குறித்த அப்டேட்கள் எதையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் ‘ஆதித்யா வர்மா’ படத்தையும் அந்நிறுவனம் கைவிட்டு விட்டதாகவும், விஜய் தேவரகொண்டாவுக்கும் தமிழில் ஓரளவு மார்க்கெட் உயர்ந்திருப்பதால்  ஒரிஜினல் ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தை தமிழில் டப் செய்து வெளியிடப்போவதாகவும் செய்திகள் பரவின.

இச்செய்தியை மறுத்துள்ள தயாரிப்பாளர் முகேஷ்.ஆர்.மேத்தா,” இப்படிப்பட்ட வதந்திகளை எழுதுபவர்கள் நிச்சயமாக ஏமாறத்தான் போகிறீர்கள். படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெறுகிறது. இன்று ஏப்ரல் 9ம் தேதி படப்பிடிப்புக் குழு ஒரு பாடல்காட்சிக்காக போர்ச்சுகல் கிளம்பவிருக்கிறது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சூடாக பதிவிட்டிருக்கிறார்.

click me!