நடிகர் பிரசாந்தின் வாழ்க்கையில் அடிக்கும் கடைசி அதிர்ஷ்டக் காற்று....இவர் டைரக்‌ஷன்லயாவது கரை சேருவாரா?...

By Muthurama LingamFirst Published Aug 29, 2019, 11:13 AM IST
Highlights

சுமார் பத்துப் பதினந்து வருடங்களுக்கும் மேலாக ஹிட் என்றாலே என்னவென்று தெரியாமல் அடுத்தடுத்து தொடர்ந்து ஃப்ளாப்கள் கொடுத்துவரும் நடிகர் பிரசாந்தை வைத்து கவுதம் மேனன் ஒரு படம் இயக்கவிருக்கிறார் என்று நம்பகமான தகவல்கள் வந்திருக்கின்றன. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பெரும்போட்டிக்கு நடுவில் அடிச்சித் தூக்கி வந்த ‘அந்தாதுன்’படத்தை கவுதம் இயக்கவிருக்கிறார் என்று தெரிகிறது.

சுமார் பத்துப் பதினந்து வருடங்களுக்கும் மேலாக ஹிட் என்றாலே என்னவென்று தெரியாமல் அடுத்தடுத்து தொடர்ந்து ஃப்ளாப்கள் கொடுத்துவரும் நடிகர் பிரசாந்தை வைத்து கவுதம் மேனன் ஒரு படம் இயக்கவிருக்கிறார் என்று நம்பகமான தகவல்கள் வந்திருக்கின்றன. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பெரும்போட்டிக்கு நடுவில் அடிச்சித் தூக்கி வந்த ‘அந்தாதுன்’படத்தை கவுதம் இயக்கவிருக்கிறார் என்று தெரிகிறது.

ஆயுஷ்மன் குரானா, தபு நடித்த இந்தி படமான 'அந்தாதுன்' திரைப்படம் சென்ற ஆண்டு வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இந்தப் படம் 32 கோடி பட்ஜெட்டில் உருவாகி 450 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நிகழ்த்தியுள்ளது. இந்த படம் 'தி பியானோ டியூனர்' என்ற பிரெஞ்சு படத்தின் தழுவலாகும். விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் சென்ற ஆண்டுக்கான சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளையும் வென்றது. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷ் விரும்பியதாகவும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வலம்வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் இந்தப் படத்தின் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ளார் என தற்போது வந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான சமயத்தில் தியாகராஜன், அனுபவமுள்ள முன்னணி இயக்குநர் தான் இந்தப் படத்தை இயக்கவுள்ளார் என தெரிவித்திருந்தார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘90 வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் அறிமுகமான பிரசாந்த் பாலுமகேந்திரா,ஆர்.கே.செல்வமணி, மணிரத்னம், ஷங்கர் போன்ற முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்திருந்தாலும் இன்றைய தேதிக்கு மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறார். கவுதம் மேனனின் ஸ்டைலிஷ் மேகிங்கும், வித்தியாசமான ஹிந்திப்படக் கதையும் கடைசியாக பிரசாந்தை கரை சேர்க்குமா என்று பார்க்கவேண்டும்.

click me!