
ஊரடங்கு காரணமாக, அணைத்து சினிமா பணிகளும் முடங்கியுள்ளதால், திரையுலகை சேர்ந்த பெப்சி தொழிலாளர்களுக்கும், நலிந்த கலைஞர்களுக்கும், திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர் - நடிகைகள் பலர் முன்வந்து உதவி செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், நடிகை காஜல் அகர்வாலை தொடர்ந்து பிரபல நடிகை தமன்னா தெலுங்கு திரையுலகினருக்கு நிதி உதவியை அறிவித்துள்ளார்.
தமிழ் - தெலுங்கு என இரு திரையுலக ரசிகர்களையும் கவர்ந்து முன்னணி நடிகையாக இவருக்கு இவர், கோடிகளில் சம்பளம் வாங்கும் நிலையில், தெலுங்கு திரையுலகை சேர்த்தவர்களுக்கு மட்டும் ரூபாய். 3 லட்சம் நிதி உதவியை கிள்ளி கொடுத்துள்ளார்.
தமிழ் திரையுலை சேர்ந்தவர்களுக்கு இன்னும் இவருடைய தரப்பில் இருந்து எந்த உதவிகளும் அறிவிக்கப்படவில்லை.
ஒருவேளை நடிகை காஜல் அகர்வால் எப்படி, முதலில் சிறு தொகையை தெலுங்கு திரையுலகிற்கு நிதியாக அறிவித்து, பின் 1 .25 கோடி நிதியை தமிழ் திரையுலக பணியாளர்களுக்கும் சேர்த்து அறிவித்தாரோ, அதே பாணியில் தமன்னாவும் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.
எது எப்படி இருந்தாலும்... தமன்னா தமிழ் திரையுலகை சேர்ந்த பணியாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவாரா... அல்லது டாட்டா காட்டுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.