கோடியில் சம்பளம்! தெலுங்கு திரையுலகிற்கு நிதி உதவியை கிள்ளி கொடுத்துவிட்டு... தமிழுக்கு டாட்டா காட்டிய தமன்னா?

By manimegalai aFirst Published Apr 19, 2020, 11:14 AM IST
Highlights

ஊரடங்கு காரணமாக, அணைத்து சினிமா பணிகளும் முடங்கியுள்ளதால், திரையுலகை சேர்ந்த பெப்சி தொழிலாளர்களுக்கும், நலிந்த கலைஞர்களுக்கும், திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர் - நடிகைகள் பலர் முன்வந்து உதவி செய்து வருகிறார்கள்.
 

ஊரடங்கு காரணமாக, அணைத்து சினிமா பணிகளும் முடங்கியுள்ளதால், திரையுலகை சேர்ந்த பெப்சி தொழிலாளர்களுக்கும், நலிந்த கலைஞர்களுக்கும், திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர் - நடிகைகள் பலர் முன்வந்து உதவி செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகை காஜல் அகர்வாலை தொடர்ந்து பிரபல நடிகை தமன்னா தெலுங்கு திரையுலகினருக்கு நிதி உதவியை அறிவித்துள்ளார்.

தமிழ் - தெலுங்கு என இரு திரையுலக ரசிகர்களையும் கவர்ந்து முன்னணி நடிகையாக இவருக்கு இவர், கோடிகளில் சம்பளம் வாங்கும் நிலையில், தெலுங்கு திரையுலகை சேர்த்தவர்களுக்கு மட்டும் ரூபாய். 3 லட்சம் நிதி உதவியை கிள்ளி கொடுத்துள்ளார்.

தமிழ் திரையுலை சேர்ந்தவர்களுக்கு இன்னும் இவருடைய தரப்பில் இருந்து எந்த உதவிகளும் அறிவிக்கப்படவில்லை.

ஒருவேளை நடிகை காஜல் அகர்வால் எப்படி, முதலில் சிறு தொகையை தெலுங்கு திரையுலகிற்கு நிதியாக அறிவித்து, பின் 1 .25 கோடி நிதியை தமிழ் திரையுலக பணியாளர்களுக்கும் சேர்த்து அறிவித்தாரோ, அதே பாணியில் தமன்னாவும் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும்... தமன்னா தமிழ் திரையுலகை சேர்ந்த பணியாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவாரா... அல்லது டாட்டா காட்டுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 

click me!