’மும்பை போலீஸாரை நானா படேகர் விலைகொடுத்து வாங்கிவிட்டார்’...குமுறிக்கொந்தளிக்கும் தனுஸ்ரீ தத்தா...

By Muthurama LingamFirst Published Jun 14, 2019, 10:57 AM IST
Highlights


’மீண்டும் படங்களில் நடித்து சம்பாதிப்பதற்காக நானா படேகர் தன்னை சத்தியவான் போல காட்டிக்கொள்ள முயல்கிறார். அவருக்கு மும்பை போலீஸ் துணை போகிறது’ என்று குமுறுகிறார் நடிகை தனுஸ்ரீ தத்தா.
 

’மீண்டும் படங்களில் நடித்து சம்பாதிப்பதற்காக நானா படேகர் தன்னை சத்தியவான் போல காட்டிக்கொள்ள முயல்கிறார். அவருக்கு மும்பை போலீஸ் துணை போகிறது’ என்று குமுறுகிறார் நடிகை தனுஸ்ரீ தத்தா.

புகழ்பெற்ற இந்தி நடிகரான நானா படேகர் ‘காலா’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார். இவர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் ஒன்றை தெரிவித்திருந்தார். அதில், கடந்த 2008- ம் ஆண்டு `ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது, தகாத இடங்களில் நானா படேகர் கை வைத்து தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறினார்.மேலும் “ஹீரோயின் மட்டுமே இடம்பெறக்கூடிய அந்த பாடலில் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த நானா படேகரை நான் கண்டித்த போது, தனக்கு பிடித்ததை நான் செய்வேன் என்னை யாரும் தட்டிக்கேட்க முடியாது என்று சத்தமாகக் கூறினார். நானா படேகரின் இந்தச் செயலுக்கு படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடன இயக்குநர் ஆகிய அனைவரும் ஆதரவாக செயல்பட்டனர்.

இதுகுறித்து நான் வெளியே கூறியதால் நானா படேகர் ஆதரவாளர்களின் மிரட்டலுக்கு ஆளாகினேன். என்னுடைய குடும்பத்தாரோடு வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது  அவரது ஆதரவாளர்களால் தாக்குதலுக்கு உள்ளானேன்” என்றும் தனுஸ்ரீ தத்தா கூறினார்.அந்த விவகாரம் பாலிவுட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து தனுஸ்ரீதத்தா மும்பை ஓஸிவாரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். நானா படேகர், கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர் சித்திக், இயக்குநர் ராகேஷ் சாரங், மராட்டிய நவநிர்வான் சேவா கட்சி நிர்வாகிகள் ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக விசாரித்து வந்த மும்பை காவல்துறை தனது அறிக்கையை  நேற்றுநீதிமன்றத்தில் அளித்துள்ளது, அதில் பாலியல் புகாரில் நானா படேகருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றும், எனவே விசாரணையை முடித்துக்கொள்வதாகவும் மும்பை காவல்துறை கூறியுள்ளது.

நானா படேகருக்கு ஆதரவாக மும்பை போலீஸார் நீதிமன்றத்தில் கொடுத்திருக்கும் அறிக்கைக்கு எதிராக மனு கொடுக்கப்போவதாக சொன்ன தனுஸ்ரீ தத்தா, ‘இது அத்தனையும் நானா படேகரின் சித்து விளையாட்டு. நான் அவரை சும்மா விடப்போவதில்லை. மும்பை போலீஸாரை அவர் விலை கொடுத்து வாங்கிவிட்டார்’என்கிறார்.

click me!