கடல் கன்னியாக மாறிய ஸ்ரேயா... குட்டை உடையில் தண்ணீரில் மிதந்த படி கவர்ச்சியில் தாராளம்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 29, 2020, 5:09 PM IST
Highlights


தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரேயா தனது கணவருடன் சேர்ந்து ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.


"எனக்கு 20, உனக்கு 18" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதையடுத்து ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து அசத்தினார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் ஸ்ரேயா. இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ஸ்ரேயா, வெளிநாட்டினர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். 

இதையும் படிங்க: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படுமோசமான வீக்னஸ்... வெளிச்சத்திற்கு வந்த விவகாரம்...!

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த ஸ்ரேயா, தற்போது மீண்டும் கம்பேக் கொடுக்க முடிவு செய்துள்ளார். தனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களை தேடி வரும் ஸ்ரேயா,  அம்மா, அக்கா போன்ற கேரக்டர்களில் தன்னை யாரும் அடங்கிவிடக்கூடாது என நினைத்து தனது கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். அவ்வப்போது கணவருக்கு லிப் லாக் கொடுக்கும் வீடியோக்களையும் இன்ஸ்டாவில் பதிவேற்றி இளசுகளை கிறங்கடிக்கிறார். 

இதையும் படிங்க: “இதுக்கு புடவையே கட்டியிருக்க வேண்டாம்”...சாக்‌ஷி அகர்வாலின் அதிரடி கவர்ச்சியை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள்!

தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரேயா தனது கணவருடன் சேர்ந்து ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.மழை பட பாடலுக்கு ஸ்ரேயா கணவருடன் சேர்ந்து நடு ரோட்டில் நடனமாடிய காட்சி சமீபத்தில் வைரலானது. இந்நிலையில் தண்ணீரில் மிதந்தபடி செம்ம ஹாட்டாக இருக்கும் புகைப்படம் ஒன்றை ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அடர் சிவப்பு நிற சட்டை, மஞ்சள் நிற குட்டை டவுசருடன் நீரில் நீட்டி நிமிர்ந்து படுத்திருக்கும் ஸ்ரேயாவின் இந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது. 

click me!