மூன்று வாரம் ஆகுது..! நீண்ட தூக்கத்தில் இருந்து எழுந்து ரசிகர்களை ஏமாற்றிய சமந்தா!

By manimegalai aFirst Published Apr 22, 2020, 5:00 PM IST
Highlights

கொரானோ ஊரடங்கு ஓய்வால் பிரபலங்கள் அனைவரும் படு குஷியாக உள்ளனர். முடிந்த வரை தங்களுடைய குடும்பத்துடன், தற்போது கிடைத்திருக்கும் ஓய்வு நாட்களை கழித்து வருகிறார்கள்.
 

கொரானோ ஊரடங்கு ஓய்வால் பிரபலங்கள் அனைவரும் படு குஷியாக உள்ளனர். முடிந்த வரை தங்களுடைய குடும்பத்துடன், தற்போது கிடைத்திருக்கும் ஓய்வு நாட்களை கழித்து வருகிறார்கள்.

அந்த வகையில், டோலிவுட் - கோலிவுட் என இரு திரையுலக ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமான நடிகை, சமந்தா கடந்த மாதம் முதலே, சமூக வலைதளத்தின் பக்கம் கூட வரவில்லை.

எனவே இது தான் சாக்கு என, இவரை சுற்று சில வதந்திகளும் பரவியது. பிசியாக ஷூட்டிங்கில் இருக்கும் போது கூட ரசிகர்களை மறக்காமல், இருக்கும் சமந்தா இப்படி மாறியது தான் ரசிகர்களால் ஏற்று கொள்ளவே முடியவில்லை.

மார்ச் 28 ஆம் தேதிக்கு பிறகு, தற்போது சமந்தா புதிய புகைப்படம் ஒன்றை போஸ்ட் செய்ய, அது ரசிகர்கள் அனைவராலும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தில் தன்னுடைய செல்ல நாய் குட்டியை கட்டி அணைத்தவாறு உள்ளார் சமந்தா. ஆனால் அவரின் முகம் இந்த புகைப்படத்தில் தெரியாதது ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றம் என்றே கூறலாம். நீண்ட தூக்கத்தில் இருந்து திரும்பி வந்ததாகவும் சமந்தா கூறியுள்ளார்.

இந்த வருடத்தில் அதிக அளவில் எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருக்கும் சமந்தா, தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ஒரு படத்திலும் மட்டுமே நடித்து வருகிறார். 
 
வைரலாகி வரும் நடிகை சமந்தாவின் புகைப்படம் இதோ...

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Back from my long sleep 🤓 .. #stayhome #staysafe #prayingforyou

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on Apr 21, 2020 at 7:36pm PDT

 

 

click me!