கேரளாவிற்கு நடிகை ரோஹினி நிதி உதவி..!

Published : Aug 15, 2018, 02:17 PM ISTUpdated : Sep 09, 2018, 08:11 PM IST
கேரளாவிற்கு நடிகை ரோஹினி நிதி உதவி..!

சுருக்கம்

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழகம், புதுச்சேரி, மற்றும் கர்நாடக உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் நிதி உதவி அளித்துள்ளனர். மேலும் கோலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகர்களும் தங்களால் முடிந்த நிதி கொடுத்து உதவி செய்து வருகின்றனர்.  

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழகம், புதுச்சேரி, மற்றும் கர்நாடக உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் நிதி உதவி அளித்துள்ளனர். மேலும் கோலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகர்களும் தங்களால் முடிந்த நிதி கொடுத்து உதவி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இதுவரை கமல் 25 லட்சமும், சூர்யா, கார்த்தி இருவரும் இணைந்து 25 லட்சம் கொடுத்துள்ளனர். 

இவர்களை தொடர்ந்து நடிகை ரோஹிணி 2 லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்துள்ளார்.

கேரளாவில் 50 ஆண்டுகளுக்கு பின் பெய்து வரும் மழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு மற்றும் மண் சரிவினால் கேரள மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அபிராமிக்கு பதில் சாமுண்டீஸ்வரி செத்திருக்கலாம்! கதறி அழுத ரசிகர்கள் - சீரியல் குழுவை காரித் துப்பும் நெட்டிசன்கள்!
மேக்கப் தொல்லை எனக்கு இல்லை... நடிகை சாய் பல்லவி ஓபன் டாக்