
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகி உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இன்னொருபுறம் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்றுவருகிறது. அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்பட ஏராளமானோர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ள நிலையில், நடிகை நயன்தாரா, தனது காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் ஜோடியாக வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்த இருவரும் கொரோனா தடுப்பூசி செலுத்துக்கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.