"ரஜினியின் ஸ்டைல் காந்தம் போல் ஈர்க்கிறது"... "தர்பார்" படம் பற்றி குஷ்பூ போட்ட ட்வீட்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jan 10, 2020, 05:24 PM IST
"ரஜினியின் ஸ்டைல் காந்தம் போல் ஈர்க்கிறது"... "தர்பார்" படம் பற்றி குஷ்பூ போட்ட ட்வீட்...!

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் உடன் "தலைவர் 168" படத்தில் நடித்து வரும் குஷ்பூ "தர்பார்" படத்தை பார்த்துவிட்டு அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

ஏ.ஆர். முருகதாஸ்  - ரஜினிகாந்த் கூட்டணியில் நேற்று "தர்பார்" படம் ரிலீஸ் ஆனது. உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களில் பிரம்மாண்ட முறையில் வெளியான "தர்பார்" படத்தை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். படத்தில் சூப்பர் ஸ்டாரின் ஜோடியான நயன்தாராவிற்கு அதிக ஸ்கோப் இல்லை என்பது மட்டுமே ரசிகர்களின் வருத்தமாக இருந்தது. 

வழக்கமான ரஜினியின் மாஸ் என்டர்டெயின்மெண்ட் படமாக  வெளியான "தர்பார்" திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. நேற்று வெளியான "தர்பார்" திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மட்டுமல்லாது, திரைப்பிரபலங்களும் தியேட்டர்களுக்கே சென்று கண்டு ரசித்தனர். அத்துடன் படம் குறித்த தங்களது கருத்துக்களையும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது சூப்பர் ஸ்டார் உடன் "தலைவர் 168" படத்தில் நடித்து வரும் குஷ்பூ "தர்பார்" படத்தை பார்த்துவிட்டு அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குஷ்பூ, "ரஜினியை விட்டு உங்களது கண்களை நகர்த்தவே முடியாது. தனது ஸ்டைலால் ரஜினி காந்தம் போல ஈர்க்கிறார். அவர் மட்டும் தான் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்பதில் ஆச்சர்யமில்லை. தர்பார் பொங்கல் ட்ரீட். முருகதாஸுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?