
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஜெயசுதா.
தற்போது, முன்னணி கதாநாயகர்களுக்கு அம்மா வேடங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான, 'செக்க சிவந்த வானம்' படத்தில் பிரகாஷ் ராஜுக்கு மனைவியாகவும், சிம்பு, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோருக்கு அம்மாவாகவும் நடித்திருந்தார்.
இவர் சினிமாவை தாண்டி, அரசியல் வாதியாகவும் இருந்து வந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியில் இணைந்துள்ளார்.
ஜெயசுதா, YSR காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து YSR கட்சியில் இணைந்தார். வருகின்ற மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து திட்டமில்லை என்றும், கட்சிப் பணி செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.