’ஆளாளுக்கு மிரட்டுறாங்க சார்’...சைபர் கிரைம் போலீஸில் சரண்டரான நடிகை...

By Muthurama LingamFirst Published Jul 7, 2019, 4:37 PM IST
Highlights

தனது படவிளம்பரத்துக்காக வித்தியாசமான முறையில் வீடியோ வெளியிட்ட மலையாள நடிகை ஆஷா சரத் தான் வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சிக்கப்படுவதாக கேரள சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்துள்ளார்.

தனது படவிளம்பரத்துக்காக வித்தியாசமான முறையில் வீடியோ வெளியிட்ட மலையாள நடிகை ஆஷா சரத் தான் வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சிக்கப்படுவதாக கேரள சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்துள்ளார்.

நேற்று முன் தினம் கேரளாவில் ரிலீஸான ‘எவிடே’படத்துக்காக தனது முகநூல் பக்கத்தில் விநோதமான பதிவு ஒன்றைப் பகிர்ந்த பிரபல நடிகை ஆஷா சரத் பகிர்ந்த்ருந்தார்.அது தொடர்பாக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டு, ஒரு தவறான வீடியோவைப் பதிவிட்டதன் மூலம் அவர் தனது முகநூல் தொடர்பாளர்களின் மனதைப் புண்படுத்திவிட்டார் என்ற புகார் எழுந்தது.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆஷா சரத். கமல் நடித்த ’பாபநாசம்’ திரைப்படத்தில் இவர் பெண் போலீஸ் அதிகாரியாக நடித்தார். இவர் நடித்த ‘எவிடே’ என்ற படம்வெள்ளியன்று வெளியானது. அதையொட்டி, மூன்று தினங்களுக்கு முன்பு இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் மேக்கப் இல்லாமல் கலங்கிய முகத்துடன் காட்சியளித்த ஆஷா சரத், தனது கணவனை சில நாட்களாக காணவில்லை. அவரை கண்டுபிடித்தால் கட்டப்பனை போலீசில் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோவின் அடியில், இது ‘எவிடே’ படத்திற்கான விளம்பரம் என்று   குறிப்பிடப்பட்டிருந்தது எனினும் பலரும் அதைக் கவனிக்கவில்லை. இதனால் அவர் கூறியது உண்மை என்று பலரும் கருதி பதட்டம் அடைந்தனர்.

அதுகுறித்து முதலில்  மஜித் என்பவர்  இடுக்கி மாவட்ட போலீஸ் எஸ்பியிடம் ஒரு புகார் அளித்தார். அதில், ‘‘ஆஷா சரத் வெளியிட்டுள்ள வீடியோ தவறான முன் உதாரணமாகும். பார்ப்பதற்கு இது சாதாரண விஷயமாக இருந்தாலும், இது கடும் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என கூறியுள்ளார். அந்த முதல்  புகாரைத் தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் தாங்களும் ஆஷாவின் வீடியோவை உண்மை என்று நம்பி மன உளைச்சலுக்கு ஆளானதாக புகார்களை பதிவு செய்துவந்தனர்.

 நடிகை ஆஷா சரத்தை அவரது முகநூல் பக்கத்தில் சுமார் 15 லட்சம் பேர் பின் தொடர்ந்து வந்த நிலையில் முகநூலில் அது தொடர்பான விவாதங்கள் சூடுபிடுத்து வந்தன. இந்நிலையில் இன்று தனது வக்கீல் மூலமாக கேரள சைபர் க்ரைமில் தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக புகார் கொடுத்துள்ளார் ஆஷா சரத்.

click me!