
தமிழ் சினிமாவின் சாபக்கேடான நாளான டிசம்பர் 21 அன்று இறுதியாக ஒரே நாளில் ஆறு படங்கள் ரிலீஸாகின்றன. இதில் மிக குறைந்த தியேட்டர்களோடு களம் இறங்கும் படம், முதன் முதலில் ரிலீஸை அறிவித்த ‘சீதக்காதி’.
‘எத்தனை பேர் வேணும்னாலும் படத்தை ஒரே தேதியில் ரிலீஸ் பண்ணி எக்கேடும் கெட்டுப்போங்க என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருக்கும் நிலையில், அரையிறுதி தேர்வு மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி நான் நீ என்று பெரும்போட்டி நிலவியது. தற்போது இறுதியாக ‘கனா’ ‘அடங்க மறு’, மாரி 2’, சிலுக்குவார்பட்டி சிங்கம்’, கே.ஜி. எஃப்’, சீதக்காதி’ ஆகிய படங்கள் பெரும்போராட்டத்துக்கு மத்தியில் ஆளுக்குக் கொஞ்சமாக தியேட்டர்கள் பெற்று ரிலீஸாகின்றன.
இக்கூட்டத்தில் தனது மாமனாரின் செல்வாக்கால் மொத்தத்தில் பாதி, அதாவது சுமார் 500 தியேட்டர்கள் வரை ஆக்கிரமித்து ரிலீஸாகிறது தனுஷின் ‘மாரி 2’.இவரை எதிர்த்து தியேட்டர்கள் பெறும் முயற்சியில் சிவகார்த்திகேயன்,ஜெயம் ரவி, விஷ்ணு விஷால், டப்பிங் படம் ரிலீஸ் பண்னும் விஷால் உட்பட யாருமே வெல்ல முடியவில்லை.
இதை ஒட்டி தனுஷுக்கு எதிராக தற்காலிக கூட்டணி அமைத்திருக்கும் மேற்படி நடிகர்கள் இதற்காகவே வாட்ஸ் அப்பில் ஒரு தனி குரூ அமைக்காத குறையாக ‘மாரி2’ எப்படியாவது மண்ணைக் கவ்வணும். அதுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. கேரளாவிலருந்து மாந்திரீகர்களைக் கூப்பிட்டு வந்து பில்லி, சூன்யம் வைச்சாவது அந்த ஒல்லிப்பிச்சானை ஒழிச்சிக் கட்டணும்’ என்று பேசிவருகிறார்களாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.