தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான விவேக், தன்னுடைய காமெடி நடிப்பிலும் கூட சமூக கருத்துக்களை புகுத்தி, எளிமையாக பாமர மக்களுக்கும் புரியும் விதத்தில் வெளிப்படுத்துபவர். மேலும் இது வார்த்தையாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, சமூக கருத்துக்கொண்ட விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான விவேக், தன்னுடைய காமெடி நடிப்பிலும் கூட சமூக கருத்துக்களை புகுத்தி, எளிமையாக பாமர மக்களுக்கும் புரியும் விதத்தில் வெளிப்படுத்துபவர். மேலும் இது வார்த்தையாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, சமூக கருத்துக்கொண்ட விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் இருவர் ஒரு மாணவரை பட்டப்பகலில் நடுரோட்டில் கத்தியைக் கொண்டு தாக்கிய சம்பவம் பார்ப்பவர்களை அதிர்ச்சியாக்கிய வைத்தது.
இதுகுறித்து அந்த கல்லூரியின் முதல்வர் அருண் மொழி செல்வன் அந்த இரு மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளார். தற்போது இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளத்தில், கருத்து தெரிவித்துள்ள நடிகர் விவேக், மாணவர்கள் கையில் பட்டாகத்தி.கண்டோர் அச்சத்திலும் அதிர்ச்சியிலும்.இந்த வயதில் காதல் வந்தால் அது இதயத்தை மென்மை ஆக்கும்; கல்வி பயின்றால் அது வாழ்வை மேன்மை ஆக்கும்.ஆனால் கையில் ஆயுதம் எடுத்தால் எதிர்காலமே உனக்கு எதிரி ஆகிவிடும். என கூறியுள்ளார்.
மாணவர்கள் கையில் பட்டாகத்தி.கண்டோர் அச்சத்திலும் அதிர்ச்சியிலும்.இந்த வயதில் காதல் வந்தால் அது இதயத்தை மென்மை ஆக்கும்; கல்வி பயின்றால் அது வாழ்வை மேன்மை ஆக்கும்.ஆனால் கையில் ஆயுதம் எடுத்தால் எதிர்காலமே உனக்கு எதிரி ஆகிவிடும்.
— Vivekh actor (@Actor_Vivek)