
தெலுங்கு திரையுலகில் பிரபல காமெடியன் ஆன விஜய் சாய் நேற்று காலை, ஹைதராபாத்தில் அவர் வசித்து வந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தெலுங்கு நடிகர் நடிகைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும் இவரது தற்கொலைக்கு பண நெருக்கடி என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இவர் தற்கொலைக்கு பதிவு செய்யப் பட்டிருந்த ஒரு வீடியோ ஆதாரத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
இதில், தன்னுடைய தற்கொலைக்கு காரணம், தன்னுடைய முன்னாள் மனைவி மற்றும் அவருடைய வழக்கறிஞர் சித்ரா என கூறியுள்ளார். இவர் அவருடைய மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற போதிலும் தொடர்ந்து அவருடைய மனைவி இவரிடம் பணம்... நகை.. ஆகியவற்றைக் கேட்டு மன உளைச்சல் ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.
ஒரு நிலையில் இவருடைய தொந்தரவும், வழக்கறிஞர் தொந்தரவும் தாங்க முடியாமல்தான் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார்.
இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தாலும், இவரது காமெடி மிகவும் சிறப்பாகப் பேசப்பட்ட படங்கள் பொம்மரியலு மற்றும் அம்மையிலு அப்பாஜிலு ஆகியவை. இவருடைய மரணம் பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.