"அமைச்சர்கள் புறவாசல் வழியாக செல்ல நினைத்தால் வேலூர் ஜெயில்தான்" - நடிகர் செந்தில் பகீர் பேட்டி…

 
Published : Jun 17, 2017, 08:49 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
"அமைச்சர்கள் புறவாசல் வழியாக செல்ல நினைத்தால் வேலூர் ஜெயில்தான்" - நடிகர் செந்தில் பகீர் பேட்டி…

சுருக்கம்

actor senthil met press people after he met ttv dinakaran in his house

தமிழக அமைச்சர்கள புறவாசல் வழியாக செல்ல நினைத்தால் அவர்களுக்கு வேலூர் ஜெயில்தான் என அதிமுக அம்மா அணி பொது செயலாளர் தினகரனை சந்தித்த நடிகர் செந்தில் கூறியுள்ளார்.

தமிழக அமைச்சர்கள் கட்சித் தலைமையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் புறவாசல் வழியாக சென்றால் வேலூர் ஜெயிலுக்குத்தான் செல்லவேண்டும் என்றும் டிடிவி தினகரனை சந்தித்தபின் நடிகர் செந்தில் பேட்டியளித்தார்.

நடிகர் செந்தில், அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை, அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக இரு அணிகளும் இணைந்து செயல்பட்டால் அனைவருக்கும் நல்லது என தெரிவித்தார்.

தமிழக அமைச்சர்கள் புற வாசல் வழியாக சென்றால் வேலூர் ஜெயிலுக்குத்தான் செல்லவேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

அமைச்சர்களே இரண்டு, மூன்று பதவிகளில் இருக்கின்றனர் என்றும், அந்த பதவிகளை மற்ற எம்எல்ஏக்களுக்கு அவர்கள் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்றும் செந்தில் தெரிவித்தார்.

இப்போதுள்ள நிலைமையே இருந்தால் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்றும்  ரஜினிகாந்த் அரசியலுக்கு வரட்டும், அவர் இந்தியர் என்றும் செந்தில்  கூறினார்..

 

 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சமந்தாவின் ஹனிமூன் பிளான்: ராஜ் உடன் ரொமான்டிக் டிரிப் எங்கே?
ஒரே ஆண்டில் 2 தோல்விகள் கொடுத்த பிரபாஸ்!