அறக்கட்டளை மூலம் 1000 குடும்பத்திற்கு உதவிய பிரகாஷ்ராஜ்!

Published : Apr 15, 2020, 11:30 AM IST
அறக்கட்டளை மூலம் 1000 குடும்பத்திற்கு உதவிய பிரகாஷ்ராஜ்!

சுருக்கம்

கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அடுத்து  இந்தியாவிலும் அதிகம் பரவி வருவதால், அதில் இருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக, மத்திய  மற்றும் மாநில அரசுகள் பல்வேரு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.   

கொரோனா:

கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அடுத்து  இந்தியாவிலும் அதிகம் பரவி வருவதால், அதில் இருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக, மத்திய  மற்றும் மாநில அரசுகள் பல்வேரு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

ஏற்கனவே 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த, மத்திய அரசு, மேலும் 18 நாட்களுக்கு ஊரடங்கை நீடித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட சில பணிகளுக்காக கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளது.



உதவிகள்:

வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்படும், மக்களுக்கு உதவும் வகையில்.. பிரபலங்கள் பலர் தானாக முன் வந்து தங்களால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

பிரகாஷ் ராஜ் உதவி:

அந்த வகையில், ஏற்கனவே நடிகர் பிரகாஷ் ராஜ், திரையுலக பணிகள் அனைத்தும் முடங்கியதால், வேலை இன்றி கஷ்டப்பட்டு வரும்  பெப்சி தொழிலாளர்களுக்கு, அரிசி கொடுத்து உதவிய நிலையில், மேலும் சில உதவிகளை செய்துள்ளார்.



1000 குடும்பத்திற்கு உதவி:

அந்த வகையில், பிரகாஷ்ராஜ் தான் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம், இதுவரை சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கியுள்ளாராம். மேலும் தன்னுடைய பண்ணை வீட்டில் வேலை செய்து வரும் 30 தொழிலாளர்களுடன் நடிகர் பிரகாஷ் ராஜும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே நேரத்தில் தன்னிடம் பணியாற்றி வரும் அனைவருடைய குடும்பத்திற்கும் தேவையான உதவிகளை பிரகாஷ்ராஜ் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!
இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்