சுயேச்சை வேட்பாளராக களமிறங்கும் நடிகர் மன்சூர் அலிகான்! எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் தெரியுமா?

By manimegalai aFirst Published Mar 17, 2021, 5:29 PM IST
Highlights

சம்பீத்தில், கட்சி ஒன்றை துவங்கிய நடிகர் மன்சூர் அலிகான் அவரது கட்சிக்கு முறையான அங்கீகாரம் கிடைக்காததால், சுயேச்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
 

சம்பீத்தில், கட்சி ஒன்றை துவங்கிய நடிகர் மன்சூர் அலிகான் அவரது கட்சிக்கு முறையான அங்கீகாரம் கிடைக்காததால், சுயேச்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இயக்குனரும், அரசியல் தலைவருமான சீமான் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு, லோக்சபா தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் களம் கண்டவர் , நடிகர் மன்சூர் அலிகான். சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி, ‘தமிழ் தேசிய புலிகள் கட்சி’ என்கிற ஒன்றை துவங்கி உள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில் தன்னுடைய கட்சியான ‘தமிழ் தேசிய புலிகள் கட்சி’ க்கு, முரையான அங்கீகாரம் கிடைக்காததால், சுயேச்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். கோவை ‘தொண்டாமுத்தூர்’ தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக மன்சூர் அலிகான் போட்டியிட உள்ளார்.  இதற்காக 18.03.2021 நாளை காலை 11’மணிக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சையாக போட்டியிட உள்ள, கோவை தொந்தாமுத்தூர் தொகுதியில், அதிமுகவில் செல்வாக்குமிக்க தலைவராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் உள்ள எஸ்.பி.வேலுமணி தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள தொண்டாமுத்தூரில் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில், அவருக்கு சவால் விடும்விதமாக திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழக இளைஞர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான கார்த்திகேய சிவசேனாபதியை போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!