வெறித்தனம் பிடித்த ரசிகர்கள்…. டிக்கெட் கிடைக்காததால் தியேட்டர் மீது கல்வீசி தாக்குதல்!

By manimegalai aFirst Published Oct 14, 2021, 6:31 PM IST
Highlights

அன்மையில் கிச்சா சுதீப்பின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவரது ரசிகர்கள் எருமை மாட்டை பலியிட்டு அவரது கட் அவுட்டுக்கு ரத்த அபிஷேகம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அன்மையில் கிச்சா சுதீப்பின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவரது ரசிகர்கள் எருமை மாட்டை பலியிட்டு அவரது கட் அவுட்டுக்கு ரத்த அபிஷேகம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடக மொழி திரைப்படங்கள் மட்டுமல்ல அங்குள்ள சினிமா ரசிகர்களுமே சற்று கரடு முரடானவர்கள் தான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபனம் ஆகியுள்ளது. நான் ஈ, விஜய் நடிப்பில் புலி, பாகுபலி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களாலும் நன்கு அறியப்பட்டவர் கிச்ச சுதீப். இவருக்கு கர்நாடகத்தில் வெறித்தனம் பிடித்த ரசிகர் பட்டாளம் உள்ளது.

சமீபத்தில் கிச்சா சுதீப்பின் பிறந்தநாளை மாநிலம் முழுவதும் அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக திரையரங்கு முன்பு திரண்ட ரசிகர்கள் பட்டப் பகலில் மிகப்பெரிய எருமை மாட்டை வெட்டி பலியிட்டு அதன் ரத்தத்தால் கிச்சா சுதீப்பின் கட் அவுட்டுக்கு அபிசேகம் செய்து வெறித்தனத்தை வெளிப்படுத்தினர். ரசிகர்களின் இச்செயல்களுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் தான் தசார பண்டிகை விருந்தாக கிச்சா சுதீப் நடித்த கோடி கொப்பா 3 என்ற திரைப்படம் கர்நாடகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தாலும், விடுமுறை தினத்தில் கிச்சா சுதீப் படத்தை காண ரசிகர்கள் படையெடுத்ததால் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. விஜயநகரா நகரில் உள்ள ட்ரீம் லேண்ட் தியேட்டரில் காலை காட்சிக்கு டிக்கெட் கிடைக்காததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், திரையரங்கு மீது கற்கலை வீசி தாக்குதல் நட்த்தியுள்ளனர்.

ரசிகர்கள் நடத்திய கல்வீச்சில் தியேட்டரின் கண்ணாடிகள் பெயர்ப்பலகைகள் உடைந்து நொருங்கியது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவலறிந்து போலீஸார் சம்பவ இடத்திற்குள் வருவதற்குள் கிச்ச சுதீப் ரசிகர்கள் தப்பிச் சென்றனர். வீடியோ காட்சிகளை வைத்து வெறித்தனமான ரசிகர்களை கர்நாடகா போலீஸ் தேடி வருகிறது.

click me!