
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது. ஆனால் அதை பலரும் கேட்பதாக தெரியவில்லை. ஏதோ பண்டிகை கால விடுமுறை போல கொண்டாட்டத்துடன் பைக்கில் ஏறி ஊர் சுற்றி வருகின்றனர்.
இதையும் படிங்க: “இதுதான் என் கடைசி போட்டோ”... கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு தலைமறைவான சனம் ஷெட்டி...!
வீட்டை விட்டு வெளியே வராதீங்க... வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்... திரைப்பிரபலங்கள் பலரும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். வீம்பு பிடிச்ச சிலரோ எது நடந்தால் எங்களுக்கு என்ன... நாங்க வழக்கம் போல கும்பலாக சுத்துவோம் என வெளியே வந்து போலீசாரிடம் வாங்கி கட்டிக்கொள்கின்றனர்.
தடியடி, தோப்புக்கரணம், கொரோனா உறுதிமொழி என விதவிதமாக எத்தனை தண்டனை கொடுத்தாலும், நம்ம புள்ளிங்கோ அக்கப்போரு தாங்க முடியவில்லை. கொரோனா வைரஸின் தீவிரம் தெரியாமல் வெளியே ஜாலியாக சுற்றித் திரிகின்றனர். இன்னும் சிலரோ குடும்பம், குடும்பமாக கார், பைக்கில் ஊர் சுற்றுவதையும் காண முடிகிறது.
இதையும் படிங்க: “படிச்சவங்க தானே, உங்களுக்கு அறிவே இல்லையா?”... மழலை மொழியில் வறுத்தெடுக்கும் பேபி மானஸ்வி...!
இதை அறிவுறுத்தும் விதமாக நடிகர் ஜீவா தனது ட்விட்டர் ஐடியின் பெயரை உள்ளே போ என மாற்றியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை பாரத பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதை கெளரவிக்கும் விதமாகவும், மக்களுக்கு முறையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் நடிகர் ஜீவா செய்துள்ள இந்த செயல் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.