கேரளா நடிகையின் பாலியல் வழக்கு - காவ்யா மாதவனிடம்  6 மணி நேரம் விசாரணை…!!!

 
Published : Jul 26, 2017, 02:59 PM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
கேரளா நடிகையின் பாலியல் வழக்கு - காவ்யா மாதவனிடம்  6 மணி நேரம் விசாரணை…!!!

சுருக்கம்

Actor Dilip was jailed in the jail for allegedly sexually harassing a famous actress in Kerala his wife Kavya Madhavan was detained for 6 hours by police.

கேரளாவில் பிரபல நடிகை, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் சிறையில் அடைக்கபட்டுள்ள நிலையில், அவரின் மனைவி காவ்யா மாதவனிடம் ஆலுவா போலீசார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

கேரளாவில் நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரின் ஜாமீன் மனுவை கேரள நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில், ஆலுவாவில் உள்ள திலீப்பின் வீட்டுக்கு சென்ற தனிப்படை போலீசார், அவரின் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

கடத்தல் குறித்து ஏற்கனவே காவ்யா மாதவனுக்கு தெரியுமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றதாகவும், இதில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கில் காவ்யா மாதவனும் கைது செய்யப்படலாம் என தகவல் பரவி வருவதால் கேரள திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!