நடிகர் திலீப்புக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்…அலுவா சிறையில் அடைப்பு…

 
Published : Jul 11, 2017, 08:07 AM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
நடிகர் திலீப்புக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்…அலுவா சிறையில் அடைப்பு…

சுருக்கம்

actor dilip in Aluwa jail

நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட  மலையாள நடிகர் திலிப்பை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை பாவான, கடந்த பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் நடிகை  பாவனாவின்  கார் டிரைவர் மார்ட்டின், முன்னாள் கார் டிரைவர் 'பல்சர்' சுனில், வினீஸ் உட்பட ஆறு பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் மலையாள நடிகர் திலீப், தூண்டுதலின் பேரில் பாவனாவை கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து நடிகர் திலீப் , அவரது மனைவி காவ்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று திலீப்பிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

காலை முதல் நடத்தப்பட்ட  விசாரணையில்  பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்ற சதியில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து நடிகர் திலீப்பை போலீசார் கைது செய்தனர். 

இதையடுத்து  இன்று  அதிகாலை கொச்சி அங்கமாலியில் நீதிபதி முன் திலீப் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அலுவா நீதிமன்ற அடைக்கப்பட்டார். அவரை நாளை காவலில் எடுத்து விசாரிக்க கேரள போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!