
காலம் காலமாக கடை பிடித்து வரும் ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை தகர்க்கும் விதத்தில், உச்ச நீதி மன்ற தீர்ப்பு இருப்பதாக சிலர் கூறி வந்தாலும், இந்த தீர்ப்பு சிலர் ஆதரவு தெரிவித்து.. பெண்களையும் சபரி மலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என கூறிவருகிறார்கள்.
மேலும் இந்த தீர்ப்பு குறித்து, அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் சபரிமலை விவகாரம் குறித்து ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் தங்களுடைய கருத்தை தெரிவித்தனர்.
இந்த நிலையில் நடிகர், கமல்ஹாசனின் சகோதரருமான சாருஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சபரிமலை விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
ஒரு தவறான சமத்துவம். சபரிமலைக்கு செல்வதில் கேட்கப்படும் சமத்துவம், பெண்கள் ஆண்களின் பொதுக் கழிப்பறையில் உட்காரும் உரிமை கேட்பது போன்றது. ஏன் புகை பிடிப்பதிலும் தண்ணி அடிப்பதிலும் சமத்துவம் கேட்பதில்லை? அதையெல்லாம் கேட்டால் நாங்கள் ஆண் விபசார உரிமை வேண்டும்' என சாருஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.