
தெலுங்கு திரையுலகில், முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. இவர் ஆந்திராவில் உள்ள ஹரிந்துபூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இதனால் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு போது, பத்திரிக்கையாளர்கள் சிலர் அவரை சூழ்ந்து கொண்டு, புகைப்படம் எடுப்பது, வீடியோ எடுப்பது என அவர்களுடைய பணியை செய்துள்ளனர்.
பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போது... பத்திரிகையாளர்கள் இப்படி செய்வதால், கோபமான பாலகிருஷ்ணா பத்திரிகையாளர் ஒருவரை கன்னத்தில் அறைந்தார். இதனை எதிர்த்து அவர் கேள்வி எழுப்பிய போது... 'உன்னை கொலை செய்துவிடுவேன். எனக்கு குண்டு வீசவும் தெரியும், கத்தி வீசவும் தெரியும்" என கூறி மிரட்டியுள்ளார்.
இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.