நடிகர் அருண் விஜய்க்கு படப்பிடிப்பில் காயம்..! பதறி போன படக்குழு... என்ன ஆச்சு..?

By manimegalai aFirst Published Aug 14, 2021, 11:27 AM IST
Highlights

நடிகர் அருண் விஜய், தன்னுடைய தங்கையின் கணவரான இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பில் எதிர்பாராத விதமாக அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டதால், படக்குழு பதறி போய் விட்டதாம். இந்த தகவல் தற்போது வெளியாக சமூக வலைத்தளத்தில் அருண் விஜய் ரசிகர்கள் அவருக்கு என்ன ஆனது என அக்கரையோடு விசாரித்து வருகிறார்கள்.
 

நடிகர் அருண் விஜய், தன்னுடைய தங்கையின் கணவரான இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பில் எதிர்பாராத விதமாக அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டதால், படக்குழு பதறி போய் விட்டதாம். இந்த தகவல் தற்போது வெளியாக சமூக வலைத்தளத்தில் அருண் விஜய் ரசிகர்கள் அவருக்கு என்ன ஆனது என அக்கரையோடு விசாரித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஹரி இயக்கத்தில் கடைசியாக விக்ரம் நடித்த சாமி 2 திரைப்படம் 2018ம் ஆண்டு வெளியானது. அதன் பின்னர் சூர்யா - ஹரி கூட்டணி 6வது முறையாக ஒன்றிணையவிருந்த 'அருவா' படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் அந்த படத்திலிருந்து ஹரி விலகியதாக கூறப்படுகிறது. இடையில் அந்த கதையில் விக்ரம் நடிக்க உள்ளதாக கூட தகவல்கள் பரவின.

 

ஆனால் முதன் முறையாக தனது மனைவி ப்ரீத்தாவின் அண்ணனான அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து ஆக்‌ஷன் கதை ஒன்றை இயக்கி வருகிறார். கிராமத்து கதையம்சம் கலந்து, ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வருகிறதாம். அங்கு படக்குழுவினர் ஸ்டண்ட் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அருண் விஜய்க்கு கையில் பலமாக ஆதி பட்டதால் படக்குழுவினர் அனைவருமே ஒரு நிமிடம் பதறிவிட்டார்களாம் .

பின்னர் மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற போது,  சுமார் 5 நாட்களுக்காவது, அருண் விஜய் அதிக கணம் கொண்ட பொருட்களை தூக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் இந்த சண்டை காட்சியை முடித்து கொடுக்க வேண்டும் என அருண்விஜய் ஒரு மணி நேரம் மட்டுமே ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் குறிப்பிட்ட சண்டை காட்சியை நடித்து கொடுத்துள்ளார். இந்த செயல் நடிப்பு மீது அருண் விஜய்க்கு உள்ள பொறுப்பை வெளிப்படுத்தும் விதமாக இருந்தாலும், தொடர்ந்து ரசிகர்கள் அக்கறையோடு நலம் விசாரித்து வருகிறார்கள்.

இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், யோகிபாபு, அம்மு அபிராமி, தலைவாசல் விஜய், உள்பட பலர் நடித்து வருகின்றனர்.  ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை,  த்ரிஷா இல்லனா நயன்தாரா, என் ஆளோட செருப்பக் காணோம், இமைக்கா நொடிகள், இஃக்லூ படங்களை தொடர்ந்து Drumsticks productions சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ். சக்திவேல் தயாரித்து வருகிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.

click me!