
ஊரடங்கு நேரத்தில் பட வேலைகள் அனைத்தும் முடங்கியுள்ள நிலையில், நடிகர் அருள்நிதி கமிட் ஆகியுள்ள, திரில்லர் படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை விஜய் ராஜேந்திரா என்பவர் இயக்க உள்ளார். இப்படம் கல்லூரி சம்பவங்களை மையப்படுத்தி, திக் திக் காட்சிகளுடன் திரில்லராக எடுக்கப்பட உள்ளதாகவும், விரைவில் இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் துவங்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை அவந்திகா மிஸ்ரா நடிக்கவுள்ளார்.
பிரபல மாடலும், நடிகையுமான இவர், தெலுங்கு திரையுலகில் 'மாயா' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடிகர் அசோக்செல்வன் நடித்த 'நெஞ்சமெல்லாம் காதல்' படத்தின் மூலம் கடந்த 2017ம் ஆண்டு தமிழில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக, அருள்நிதி நடிப்பில் கே 13 திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து, தற்போது நடிகர் ஜீவாவுடன் இணைந்து தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தநிலையில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.