கலங்கி நிற்கும் ஷிவானியை தட்டி கொடுத்து தேற்றும் ஆரி..! இரண்டாவதில் நாளிலேயே இப்படியா?

By manimegalai aFirst Published Oct 6, 2020, 11:27 AM IST
Highlights

அக்டோபர் 4 ஆம் தேதி மிக பிரமாண்டமாக ஆரம்பமான, பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் நாளே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பானது. பிக்பாஸ் முதல் சீசனை பீட் பண்ணமுடியாது என்றாலும், கடைசி இரண்டு சீசன்களை விட, விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இந்த ஷோ நகர வேண்டும் என்பதே ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
 

அக்டோபர் 4 ஆம் தேதி மிக பிரமாண்டமாக ஆரம்பமான, பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் நாளே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பானது. பிக்பாஸ் முதல் சீசனை பீட் பண்ணமுடியாது என்றாலும், கடைசி இரண்டு சீசன்களை விட, விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இந்த ஷோ நகர வேண்டும் என்பதே ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

பிக்பாஸ் வீட்டின் உள்ளே வந்தால், கவர்ச்சியால் கிறங்கடிப்பர் என எதிர்பார்த்த ஷிவானி, இரண்டாம் நாளே கலங்கி நிற்கிறார். மற்ற போட்டியாளர்களை விட, எப்போதும் தனிமையாகவே இவர் இருப்பதாக உணர்ந்த பலர், இவருடைய கையில் ஹார்ட் முத்திரையை பதித்து, இவரை ஓரம் கட்டினர்.

இதனால் துவண்டு போய் நிற்கும் ஷிவானியை, ஒரு அண்ணன் போல்  அட்வைஸ் செய்து தேற்றுகிறார் ஆரி. உனக்கு இன்ஸ்டாகிராமில் எவ்வளவு ஃபேன்ஸ்  இருகாங்க, நீ தினமும் போடும் ஒரு வீடியோவிற்கு பல ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும்... என ஆறுதலாக பேசுகிறார்.

ஷிவானி மனதில் சோகம் இருந்தாலும் அதனை துளியும் முகத்தில் காட்டி கொள்ளாமல், நான் இதனை கேம் போன்று விளையாடவில்லை நான் நானாகவே விளையாடுகிறேன் என கூறுகிறார். போகிற போக்கை பார்த்தால் ஷிவானிக்கு தான் முதல் முதலில் ஆர்மி துவங்கி ரசிகர்கள் ஆதரிப்பார்கள் போலவே...

தற்போது வெளியாகியுள்ள புரோமோ இதோ...

of - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/fMoZ4rHaUy

— Vijay Television (@vijaytelevision)

click me!