"இந்தக் கிளியும் பறந்துடுச்சே...!!!" - வருத்தத்தில் தயாரிப்பாளர்

 
Published : Jun 12, 2017, 09:33 AM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
"இந்தக் கிளியும் பறந்துடுச்சே...!!!" - வருத்தத்தில் தயாரிப்பாளர்

சுருக்கம்

a producer worry about actors

அண்ணன் தம்பி இரண்டு ஹீரோக்களுக்கும் குடும்பத் தயாரிப்பாளராக இருந்தவர் இப்போது இரண்டு ஹீரோக்களும் கழற்றி விட்டதால் தனியாக நிற்கிறாராம். 

பசுமை நிறுவனம் தொடங்கப்பட்டதே அண்ணன் தம்பி இரண்டு ஹீரோக்களுக்காகவும் தான். அவர்களது உறவினர் என்று சொல்லிக்கொண்ட ஒருவர் தொடங்கி நிர்வகித்து வந்தார்.    பின்னர் திடீர் என்று அண்ணன் நடிகர் தனியாக ஒரு நிறுவனம் தொடங்கினார்.

கணக்கு வழக்கு பிரச்னை என்று ஒரு தகவல் வந்தது. அண்ணனுக்கு வந்த கதைகளை தம்பி பக்கம் திருப்பி விட்டார் தயாரிப்பாளர். அதனால் தான் அண்ணன் தனி நிறுவனம் தொடங்கினார் என்றும் சொன்னார்கள். தம்பி நடிக்கும் படங்களை பசுமை நிறுவனம் தயாரித்து வந்தது. இப்போது என்ன ஆயிற்றோ தெரியவில்லை. தம்பியும் அந்த தயாரிப்பாளரை கழற்றி விட்டார்.

அண்ணனது நிறுவனத்தில் அடுத்து படம் நடிக்கப்போகிறாராம். அறிவிப்பு வந்துவிட்டது. அண்ணன் போனா என்ன தம்பி இருக்கார் என்று தைரியமாக இருந்த தயாரிப்பாளர் இப்போது கவலையில் இருக்கிறாராம். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜே சித்ராவைத் தொடர்ந்து... நடிகை ராஜேஸ்வரியின் விபரீத முடிவு: திரையுலகைத் தாக்கும் மரண அலை!
கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!