நாம் நல்லாயிருக்கோம்…நமக்கு சோறு போடும் விவசாயிகள் நன்றாக இல்லையே…நடிகர் விஜய் வேதனை…

 
Published : Jun 12, 2017, 08:12 AM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
நாம் நல்லாயிருக்கோம்…நமக்கு சோறு போடும் விவசாயிகள் நன்றாக இல்லையே…நடிகர் விஜய் வேதனை…

சுருக்கம்

Actor vijay speak about our farmers in a meeting

இந்தியா வல்லரசாக மாறுவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம், முதலில் விவசாயிகளுக்கான நல்லரசாக மாற வேண்டும் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் பெரும்பாலும் எந்த விஷயங்கள் குறித்தும் கருத்து தெரிவிப்பதை தவிர்த்துவிடுவார். அதுவும் அரசியல் என்றால் அவர் சுத்தமாக எதுவும் சொல்ல மாட்டார்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய நடிகர் விஜய், விவசாயம்தான் நம் நாட்டின் முதுகெலும்பு என்றும் அதை நாம் சிறப்பாக பேணி பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்தியா வல்லரசாக மாறுவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும் முதலில் விவசாயிகளுக்கான நல்லரசாக மாற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மூன்று வேலை உணவு நமக்கு சுலபமாக கிடைப்பதால் அதன் மதிப்பு தெரியாமல் போய்விட்டதாக விஜய் தெரிவித்தார்.

நாம் நன்றாக உள்ளோம், ஆனால் நமக்கு சோறு போடும் விவசாயிகள் நன்றாக இல்லை என தெரிவித்த விஜய், அரிசியை உற்பத்தி செய்துவிட்டு, அதை இலவசமாக பெற விவசாயிகள் ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறார்கள் என வேதனை தெரிவித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்