யாருமே வந்து பார்க்கல... 20 முறைக்கும் மேல் தற்கொலை எண்ணம் வந்தது... நடிகர் பொன்னம்பலத்தின் பகீர் பேச்சு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 24, 2020, 08:07 PM IST
யாருமே வந்து பார்க்கல... 20 முறைக்கும் மேல் தற்கொலை எண்ணம் வந்தது... நடிகர் பொன்னம்பலத்தின் பகீர் பேச்சு...!

சுருக்கம்

சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்த போதும் தனது பிள்ளைகளுக்காக எதுவுமே சேமிக்கவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ள பொன்னம்பலம், தனக்கு சிகிச்சைக்கு உதவும் படி முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், விக்ரம், ராகவா லாரன்ஸ் ஆகியோருக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

1990களில் வில்லன் நடிகராகப் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பொன்னம்பலம். சண்டைக் கலைஞராகத் திரையுலகில் அறிமுகமாகி நடிகராக மாறினார். சமீபத்தில் பிக்பாஸ் சீஸன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிலையில் திடீரென சிறுநீரகக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பொன்னம்பலம் அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்த கமல் ஹாசன், பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்கு உதவியுள்ளார். 

 

இதையும் படிங்க: சட்டை பட்டன்களை கழட்டிவிட்டு செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்த பிரபல தொகுப்பாளினி டி.டி... வைரல் கிளிக்ஸ்...!!

மேலும், பொன்னம்பலத்தின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு அவருடைய இரு குழந்தைகளின் படிப்புச் செலவையும் ஏற்றுக்கொள்வதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இதையடுத்து பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்கு மேலும் பணம் தேவை என்பதால் ரஜினியும் உதவ முன்வந்துள்ளார். இதுபற்றி பொன்னம்பலம் பேசும் போது.." எனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. இதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன். என் மகன், மகள் ஆகியோரின் படிப்புச் செலவை கமல் சார் ஏற்றுக்கொண்டார். எனது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செலவை ரஜினி சார் ஏற்றுக்கொண்டார் என்று தெரிவித்தார். 

 

இதையும் படிங்க: தஞ்சாவூர் ஆண்களை அவமதித்த வனிதா... சொந்த ஊர்காரங்கள தப்பா பேசவில்லை என அதிரடி விளக்கம்...!

சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நடிகர் பொன்னம்பலம் இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கடந்த சில தினங்களில் தனக்கு தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணம் இருபது முறைக்கும் மேல் வந்தது என பொன்னம்பலம் கூறியுள்ளார். இது அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 

 

இதையும் படிங்க: உடலை விட்டு நழுவும் வழு வழு உடையில் அமலா பால்... அதிரடி கவர்ச்சியுடன் அம்மணி சொன்ன வாழ்க்கை தத்துவம்...!

சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்த போதும் தனது பிள்ளைகளுக்காக எதுவுமே சேமிக்கவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ள பொன்னம்பலம், தனக்கு சிகிச்சைக்கு உதவும் படி முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், விக்ரம், ராகவா லாரன்ஸ் ஆகியோருக்கு கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தனது ஸ்டண்ட் யூனியனில் இருந்து யாருமே தன்னை பார்க்க வரவில்லை என்றும், ஸ்டண்ட் யூனியன் தனக்கு சேர வேண்டிய ஓய்வூதிய பணத்தை கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். ஒரு காலத்தில் மிரட்டலான வில்லனாக வலம் வந்த பொன்னம்பலத்தின் பரிதாப நிலையைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!