பாலி*ல் ரீதியாக துன்புறுத்தினார்... ராப்பர் வேடன் மீது மேலும் 2 பெண்கள் பரபரப்பு புகார்

Published : Aug 18, 2025, 01:00 PM IST
Kerala Rapper Vedan

சுருக்கம்

ராப்பர் வேடன் மீது ஏற்கனவே ஒரு பெண் பாலியல் புகார் அளித்திருந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு பெண்கள் அவர் மீது முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர்.

Harassment Complaints Against Vedan : பாலியல் வன்கொடுமை வழக்கில் முன் ஜாமீன் கோரி ராப்பர் வேடன் தாக்கல் செய்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அவர் மீது மேலும் புகார்கள் எழுந்துள்ளன. ராப்பர் வேடன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறி இரண்டு பெண்கள் புகார் அளித்துள்ளனர். முதலமைச்சரை நேரில் சந்தித்து புகார் அளிக்க இரு பெண்களும் நேரம் கேட்டுள்ளனர். விரைவில் முதலமைச்சரை சந்தித்துப் பேச உள்ளனர். தலித் இசை குறித்து ஆராய்ச்சி செய்ய வேடன் என்பவரை தொடர்பு கொண்ட பெண்ணை, கொச்சிக்கு வரவழைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக முதல் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்த்தபோது கொடூரமாக தாக்கியதாகவும் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.

தனது இசை நிகழ்ச்சிகளில் ஈர்க்கப்பட்டு தொடர்பு கொண்ட வேடன், கொடூரமான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக இரண்டாவது பெண் புகார் அளித்துள்ளார். இசை நிகழ்ச்சிகளை நடத்தும் பெண் இப்புகாரை அளித்துள்ளார். 2020 - 2021 காலகட்டத்தில் இந்த இரண்டு சம்பவங்களும் நடந்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. அப்போது வேடனுக்கு எதிராக இரண்டு பெண்களும் மீ டூ (#MeToo) பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.

வேடன் மீது குவியும் புகார்கள்

முன்னதாக, பெண்ணின் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் முன் ஜாமீன் கோரி ராப்பர் வேடன் உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் திருக்காக்கரை ஏசிபியின் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது இன்ஃபோபார்க் காவல் நிலைய ஆய்வாளர் வழக்கை விசாரித்து வருகிறார். ஐந்து முறை பாலியல் வன்கொடுமை நடந்ததாகவும், கோழிக்கோடு, கொச்சி மற்றும் எலூரிலும் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். போதைப்பொருள் பயன்படுத்திய பின்னர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து அறிந்த நண்பர்களின் பெயர்களும் அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தில் உள்ளன.

2023 ஜூலை முதல் தன்னைத் தவிர்த்துவிட்டதாகவும், அழைத்தால் போனை எடுக்கவில்லை என்றும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இந்தப் புறக்கணிப்பு தன்னை மனதளவில் பாதித்து மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் கூறியுள்ளார். பல முறை வேடனுக்கு 31,000 ரூபாய் கொடுத்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இதற்கான கூகுள் பே விவரங்களையும் அந்தப் பெண் சமர்ப்பித்துள்ளார். ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வேடனுக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: அப்பாவை கட்டிப்பிடித்து கதறி அழுத சரவணன் : கூலா வேடிக்கை பார்த்த மயில்!
டபுள் எவிக்‌ஷன்... பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் காலியாகப்போகும் 2 விக்கெட் யார்?