
பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகர்களான டோராபாபு மற்றும் பரதேசி ஆகியோர் சொகுசு குடியிருப்பில், மேற்கொண்ட அதிரடி ரெய்டில் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த புதன் கிழமை அன்று, விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சார மோசடிகள் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து மாதவரம் பகுதியில் அந்த சொகுசு குடியிருப்புக்கு அடிக்கடி பல ஆண்கள் வந்து போவதை கண்காணித்து வந்த போலீசார், அதிரடியாக ரெய்டு நடத்தினர்.
அப்போது நான்கு பேர் பிடிபட்டதாக கூறப்படுகிறது. அதில் இருவர் தொலைக்காட்சி நடிகர்கள் அடங்குவர். இவர்களுடன் இருந்த ஒரு பெண்ணும் மீட்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.