தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் சி.இ.ஓ வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிங்க...

By SG BalanFirst Published Apr 10, 2024, 4:39 PM IST
Highlights

நான்கு பிரிவுகளில் சி.இ.ஓ., புராஜெக்ட் லீடர் பணிக்கான காலி இடங்கள் உள்ளன. இதேபோல கணக்காளர் மற்றும் கம்பெனி செயலாளர் பணிக்கும் ஆட்சேர்ப்பு நடக்க உள்ளது.

சென்னையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம் புராஜெக்ட், கணக்காளர் அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலைவாய்ப்புக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நான்கு பிரிவுகளில் சி.இ.ஓ., புராஜெக்ட் லீடர் பணிக்கான காலி இடங்கள் உள்ளன. இதேபோல கணக்காளர் மற்றும் கம்பெனி செயலாளர் பணிக்கும் ஆட்சேர்ப்பு நடக்க உள்ளது. இந்தப் பணிக்கு திறமையான இளைஞர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

கல்வித்தகுதி: பின்வரும் ஏதேனும் ஒரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் - Company Secretaryship, Business Administration, Technology, Engineering, Packaging, Science, Commerce, Agriculture, Food Technology, Accountancy, Commerce, Economics,Finance, Computer Application, Science, Social Work.

TRB : தமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்.. உதவி பேராசிரியர்கள் உடனே தேவை.. எப்படி விண்ணப்பிப்பது?

சம்பளம்: கல்வித்தகுதி, பணி அனுபவம் மற்றும் செயல்திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

www.vkp-tnrtp.org என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, முழுமையாக நிரப்பி தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்பவேண்டிய முகவரி:

Tamil Nadu Rural Transformation Project, 5th Floor, SIDCO Building, Chennai-32

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 15.4.2024

தமிழ்நாட்டில் 9 இடங்களில் சதமடித்த வெயில்: வானிலை ஆய்வு மையம் தகவல்

click me!