எஸ்.எஸ்.சி போட்டி தேர்வு.. காலியாக உள்ள 20,000 பணியிடங்கள்.. தமிழக அரசு அறிவிப்பு..

By Thanalakshmi VFirst Published Oct 6, 2022, 11:10 AM IST
Highlights

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக 20,000 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படவுள்ளன. 
 

இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு கூறியிருப்பதாவது: 
 

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு B மற்றும் C பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. அதன் படி இந்த ஆண்டு 20,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பெரும்பாலான B பிரிவு பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்த  20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் Combined Graduate Level Examination (CGLE) போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இவற்றில் உதவி பிரிவு அலுவலர் (Assistant Section Officer) பணியிடங்கள் மத்திய அரசின் தலைமைச் செயலகம், மத்திய புலனாய்வுத் துறை, இரயில்வே துறை, வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை, தலைமை அலுவலகம் ஆகியவற்றிற்கும்.

மேலும் படிக்க: விஏஓ அலுவலகத்தில் 2748 காலிபணியிடங்கள்.. உடனே விண்ணப்பிக்கலாம் - முழு விபரம் இதோ

ஆய்வாளர் பணியிடங்கள் (Inspector) மத்திய அரசின் வருவாய் துறைகளான Central Board of Direct Taxes, Central Board of In Direct Taxes & Customs, Directorate of Enforcement, Central Bureau of Narcotics  ஆகியவற்றிலும் மற்றும் உதவியாளர், கண்காணிப்பாளர் (Assistant Superintendent) பணியிடங்கள் மத்திய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மேலும் C  பிரிவு பணிகள் 12ஆம் வகுப்பு முடித்த 18 முதல் 27 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் Combined Higher Secondary Level (CHSL)  தேர்வு மூலம் மத்திய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு (Lower Division Clerks) தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும், இது தவிர Junior Engineer தேர்வு, Stenographer தேர்வு, Sub Inspector in Delhi Police, Central Armed Police Force (CAPF) and Central Industrial Security Force (CIF) தேர்வுகளும் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. மேற்கண்ட தேர்வுகளுக்கு நிலை 1-ல் பொதுவான போட்டித் தேர்வுகளுக்குரிய பாடத்திட்டங்களான General Intelligence and Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Comprehension பிரிவுகளிலிருந்துதான் வினாக்கள் கேட்கப்படும். 

மேலும் படிக்க:NLC யில் புதிய வேலைவாய்ப்பு 2022.. பொறியியல் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..முழு விவரம் இதோ

நிலை 2-ல்  Mathematics Abilities, Reasoning and General Intelligence, English, General Awareness and Computer Knowledge மற்றும் General studies பாடப் பிரிவுகளிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படும். எனவே தமிழ்நாடு மாணவர்கள் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பெருமளவு பங்கேற்று வெற்றி பெற வேண்டும். 

எனவே தமிழக அரசு சார்பில் இத்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் அனுபவம் மிக்க வல்லுநர்களை கொண்டு, ஒரு நாள் கருத்தரங்கம் வரும் அக்.9 ஆம் தேதி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் காலை 10.00 மணி முதல் நடைபெறும்.  

அரசு நடத்தும் இப்பயிற்சி முகாமில் போட்டித் தேர்வுகளில் ஆர்வமுள்ள இளைஞர்கள் கலந்துக் கொள்ளலாம். நேரில் வர இயலாத மாணவர்கள் பயனடையும் வகையில் இந்நிகழ்ச்சி முழுவதுமாக  இணையதளத்திலும், அரசு கேபிள் டிவியிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் மற்றும் சமூக ஊடகங்களிலும் பதிவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள்... விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி? முழு விவரம் உள்ளே!!

click me!