ரேஷன் கடைகளில் 6,500 காலி பணியிடங்கள்...10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. விவரம் இதோ..

Published : Oct 15, 2022, 05:51 PM IST
ரேஷன் கடைகளில் 6,500 காலி பணியிடங்கள்...10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. விவரம் இதோ..

சுருக்கம்

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள 6,500 க்கும் மேற்பட்ட விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

நிறுவனம்: கூட்டுறவுத்துறை

காலி பணியிடங்கள்: 6503

பணியின் பெயர்: விற்பனையாளர், உதவியாளர்( கட்டுநர்)

விண்ணப்பிக்கும் முறை: 

மாவட்ட வாரியான காலி பணியிடங்களுக்கு அந்தெந்த மாவட்ட இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: 

விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். கட்டுநர் பணிக்கு ரூ.100 செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க:சத்யாவுக்கு நடந்த துயரத்தால் மனவேதனையில் இருக்கிறேன்.. இனி எந்த பெண்ணும் இது நடக்ககூடாது: முதல்வர் உருக்கம்

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்: 

தொகுப்பூதியமாக ஓராண்டு வரை மாத சம்பளமாக ரூ.5,500 வழங்கப்படும். அதன் பின்னர் மாதம் ரூ.7,500 - 26,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

10 ஆம் வகுப்பில் பெற்றுள்ள மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் .
மேலும் படிக்க:தேனி பெரியகுளம் பாலம் கட்டுவதற்கு நெடுஞ்சாலைத்துறைக்கு தடை போட்ட நீதிமன்றம்.. நீதிபதி அதிரடி உத்தரவு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Business Training: நீங்களும் ஆகலாம் தொழிலதிபர்.! சென்னையில் 5 நாள் பயிற்சி.! A to Z கத்துக்கலாம் வாங்க.!
Job Alert: சமைக்க தெரிந்தால் போதும்.! ரூ.70,000 மாத சம்பளம் கிடைக்கும்.!