ரேஷன் கடைகளில் 6,500 காலி பணியிடங்கள்...10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. விவரம் இதோ..

By Thanalakshmi VFirst Published Oct 15, 2022, 5:51 PM IST
Highlights

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள 6,500 க்கும் மேற்பட்ட விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 

நிறுவனம்: கூட்டுறவுத்துறை

காலி பணியிடங்கள்: 6503

பணியின் பெயர்: விற்பனையாளர், உதவியாளர்( கட்டுநர்)

விண்ணப்பிக்கும் முறை: 

மாவட்ட வாரியான காலி பணியிடங்களுக்கு அந்தெந்த மாவட்ட இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: 

விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். கட்டுநர் பணிக்கு ரூ.100 செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க:சத்யாவுக்கு நடந்த துயரத்தால் மனவேதனையில் இருக்கிறேன்.. இனி எந்த பெண்ணும் இது நடக்ககூடாது: முதல்வர் உருக்கம்

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்: 

தொகுப்பூதியமாக ஓராண்டு வரை மாத சம்பளமாக ரூ.5,500 வழங்கப்படும். அதன் பின்னர் மாதம் ரூ.7,500 - 26,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

10 ஆம் வகுப்பில் பெற்றுள்ள மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் .
மேலும் படிக்க:தேனி பெரியகுளம் பாலம் கட்டுவதற்கு நெடுஞ்சாலைத்துறைக்கு தடை போட்ட நீதிமன்றம்.. நீதிபதி அதிரடி உத்தரவு

click me!