இந்துசமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு 2022.. 10 வது முடித்திருந்தால் போதும்.. உடனே விண்ணப்பியுங்கள்..

Published : Oct 10, 2022, 05:39 PM IST
இந்துசமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு 2022.. 10 வது முடித்திருந்தால் போதும்.. உடனே விண்ணப்பியுங்கள்..

சுருக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்திலுள்ள சுவாமிமலை கோவிலில் உள்ள இளநிலை உதவியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் , வரும் 15 ஆம் தேதிக்குள்ள சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் அஞ்சலக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

நிறுவனத்தின் பெயர்: இந்துசமய அறநிலையத்துறை

பணியின் பெயர்: 

இளநிலை உதவியாளர் - 2

உதவி மின் பணியாளர் - 1

உதவி பரிச்சாரகர் -2 

ஸ்தானியம் - 1

காலிபணியிடங்கள்: 6

விண்ணப்பிக்க கடைசி தேதி:  இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

www.swamimalai.hrce.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க:தமிழக அரசு வேலை.. காலியாக உள்ள 2,738 கிராம உதவியாளர் பணியிடங்கள்.. 5வது படித்திருந்தால் போதும்

கல்வித் தகுதி: 

இளைநிலை உதவியாளர் - 10 வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவி மின் பணியாளர் - அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்விநிறுவனத்தில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் எலக்ட்ரிக்கல் லைசைன்ஸ் போர்டில் இருந்து ”எச்” தர சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.

உதவி பரிச்சாரகர் - ஆகமவிதியின் படி நெய்வேத்திய பிரசாதங்கள் தயார் செய்து, சுவாமிக்கு எடுத்து சென்று வர வேண்டும். தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஸ்தானியம் - ஆகமப் பயிற்சி பாட சாலைகளில் ஓராண்டுப் பயிற்சிச் சான்றிதழ் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க:வெறும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

PREV
click me!

Recommended Stories

ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 சம்பளம்.. ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. MBBS முடித்தவர்களுக்கான சூப்பர் சான்ஸ்
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை.. 5 வழிகளில் மாணவர்கள் பார்க்கலாம்.. முழு விபரம் இதோ